Thursday, September 22, 2016

  • கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
  • உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
  • நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு  நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
  • விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
  • பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சத்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
  •  
  • ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிஸ்டம்  தரக்கூடிய  நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
  • ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
  • ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.

  • பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட  இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம்  எடுத்துகொள்ள வேண்டும்.

  • அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.

  • ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.
  • அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும்  ஏற்படும்.
  • காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.

  • சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
  • அல்லது காதலியின்  பதிலுக்கு  காத்திருந்தீர்கள்   ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்.

  • ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.

  • கன்னி பெண் ஒருத்தி மங்கள பொருள்களை ஏந்தியபடி உங்கள் வீட்டுக்கும் நுழைவது போல கனவு வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடை பெற வாய்ப்பு உள்ளது.

  • நீங்கள் பிச்சை எடுப்பது போல கனவு வந்தால் எதிர்பாராத நிலையில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் கோழி கிளி மைனா புற போன்ற பறவைகளை கனவிலே கண்டால் உங்களுக்கு திறமை இருந்தும் சோம்பேறிகளாக வளம் வருகிறீர்கள் என்று அர்த்தம்.

  • கழுகு வல்லூறு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து  விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
  • இந்த கனவுக்கு இன்னொரு  அர்த்தமும் உண்டு,உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி காரணமாக மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறமை படுவீர்கள்.

  • நீங்கள் வலை வீசியோ கண்ணி வைத்தோ பறைவைகளை பிடிப்பது போல் கனவு வந்தால் நீங்கள் தேவை இல்லமால் மற்றவர்கள் விசயத்தில் தலை இடுகிறீர்கள் என்று அர்த்தம்.

  • சிறைப் படுத்தப் பட்ட பறவை தப்பி ஓடுவதுபோல் கனவு வந்தால் உங்கள் மனதில் காரணமில்லாமல் இருந்து வந்த கலக்கமும் குழப்பமும் அகன்று விடும்.

  • நீங்கள் உடம்பு முழுவதும் மணம் மிக்க சந்தனம் பூசி கொள்வது போல கனவு வந்தால் பெரும் புகழ் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

  • குடை ஒன்றை தலைக்கு மேல் பிடிப்பது போல் கனவு வந்தால் நிரந்தரமான பாதுகாப்பான வாழ்க்கை சூழல்
  • அமைய போகின்றது என்று அர்த்தம்.

  • உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை சந்தித்து உரையாடுவது போன்று கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடைய இருக்கிறது என்று அர்த்தம்.
  • உதாரணமாக விரோதியாக கருதியவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள்.

  • உங்கள் உடலில் உள் காயம் ஏற்பட்டிருப்பதாக கனவு வந்தால் வெளிப்படையா நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ   குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  • உங்கள் உடலில் நெருப்பு சுட்ட புண் இருப்பது போல் கனவு வந்தால் உங்களிடம் நெருக்கமாக பழகும் ஒருவரே தலை மறைவாக உங்களுக்கு எதிராக செயல் படுகின்றார் என்று அர்த்தம்.
  • உங்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிடுவது  போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் பணவருவாயும் கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம்.

  • உங்கள் உடலில் காயத்துக்கு கட்டு போட்டு இருப்பதுபோல் கனவு வந்தால் பொருளாதார விசயத்தில் மற்றவர்களால் ஏமாற்ற பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  • புதிதாக கம்பளம் ஒன்றை கனவில காண நேர்ந்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர் மரணம் அடைய கூடும்.
  • கிழிந்து போன கம்பளம் கனவிலே வந்தால் சூதாட்டம் குதிரைபந்தயம் போன்றவற்றில் பணம் இழப்பு ஏற்படும்.
  • உங்களுடைய  நிழல் படம் கனவிலே கண்டால்  உங்கள் புகழுக்கு இழுக்கு வர கூடும் .
  • பெரிய மாளிகை கனவிலே காண நேர்ந்தால் பெரிய மனிதர் தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.

  • சிறிய குடிசை ஒன்றை கனவிலே கண்டால் பொருளாதார சிக்கலில் இருந்து விடு படுகிறீர்கள் என்று அர்த்தம்.

  • மனதிற்கு அச்சமூட்டும் வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இது நாள் வரை இருந்து வந்த சிக்கலும் சங்கடங்களும் கவலைகளும் அகன்று நிம்மதி அடைவீர்கள்.

  • வாய் விட்டு அழுவது போன்று கனவு வந்தால் தீராத வியாதி ஒன்று தீர்வது ஆகும்.
  • நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும்.

  • இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும்.

  • உங்கள் குடும்பத்தினர் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் தொந்தரவும் கஸ்ரங்களும் உருவாக்கலாம்.

  • சின்னஞ்சிறுவர்கள் சண்டை போடுவதாக கனவு வந்தால் நீங்கள் அவசியம் இல்லாத விசயத்தில் தலை இடுவதாக அர்த்தம்.
  • நீங்கள் யாரையாவது அடிக்க செல்வது போல் கனவு வந்தால் உங்களை பற்றி அதிகம் எண்ணி கொண்டு இருக்கிறீர்கள்  அன்று அர்த்தம் இந்த மனப்பாங்கை மாற்றி கொள்வது அவசியம். 

  • உங்கள் காதலருடன்  காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது முரட்டுக்காளை ஒன்று முட்ட வருவது போல் கனவு வந்தால் உங்கள் காதலுக்கு பெரும் இடையுறு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

  • உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார்.

  • இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர் நட்பு உங்களுக்கு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

  • நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழ் அடைய இருகின்றீர்கள் என்று அர்த்தம்.

  • பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க  சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
  • ஒரு புல்லங்குழல் கனவில வந்தால் உங்கள் மனம் உறுதி அற்றது என்று அர்த்தம்
  • நாதஸ்வரம் கனவிலே வந்தால் உங்களுக்கு தொலைவில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

  • மிருதங்கம் தபேலா மேளம் போன்ற தோல் கருவிகள் கண்டால் நீங்கள் முதல் மனிதனாக ஆசை படுகிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஆசை நிறைவேறும்.

  • ஒரு இனிமையற்ற சங்கீதம் கனவிலே வந்தால் உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

  • ஒரு கைப்பெட்டி சாலையில் கிடக்க கனவு வந்தால் உங்கள் மீது வீண் பழி ஏற்பட வாய்புள்ளது.
  • யாராவது ஒருவர்  கைபெட்டியை உங்களுக்கு தருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாரத உதவி கிடைக்கும்.

  • ஒரு கைப்பெட்டி திறக்கப்பட்டு  பொருட்கள் சிதறி காணப்பட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  • நல்ல பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் கடவுள் அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
  • மலைப்பாம்பு கனவிலே வந்தால் உங்கள் தொல்லைகள் பிணிகள் எல்லாம் அகலும் வாய்ப்புள்ளது.
  • தண்ணிப்பாம்பை   கனவிலே பார்த்தல் உங்களை பயமுறுத்தியே மற்றவர்  காரியம் சாதித்து கொள்வர்.

  • ஒரு சுண்டெலி ஓடிகொண்டிருபது போல் கனவு வந்தால் உங்கள் முயற்சி தாமதமாக நடை பெற்று  கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்
  • பெருச்சாளியை  கனவிலே கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய்  வாய்பட நேரிடும்.

  • பெருச்சாளியை நீங்கள் கையாலே எடுப்பது போல் கனவு வந்தால் உங்கள் தொழிலில்  தவறான நடைமுறைகளை கையாளுகிறீர்கள் என்று அர்த்தம்

  • பெருச்சாளி கடிப்பது போல் கனவு வந்தால் உங்குகு நெருக்கமான உறவினரிடமிருந்து பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது.

  • ஒரு தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போகின்றது என்று அர்த்தம்.

  • ஒரு தேரையை கனவிலே காண  நேர்ந்தால் உங்கள் விரோதிகள் செய்யும் முயற்சி அவர்களுக்கே பாதகமான  பலன்கிடைக்கும்.

  • ஒரு தேள் கொட்டி விட்டது போல் கனவு வந்தால் ஒரு பெரிய விபத்திலிருந்து  மீண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

  • பல்லி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் பதவி ஆட்டம் காண போகின்றது என்று அர்த்தம்.
  • முட்செடி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறீர்கள் என்று அர்த்தம்.

  • மலர்செடிகள் பூந்தோட்டம்  கனவிலே வந்தால்  உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.

  • மருதாணி கனவிலே கண்டால் உங்கள் உடல் நலம் சீராகும்.

  • துளசி செடி கனவிலே கண்டால் உங்கள் துன்பம் எல்லாம் கடவுள் ஆசீர்வாதத்தால் பறந்தோடும்.

  • தானிய மணிகளை எலி கொறிப்பது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிலோ வியாபாரத்திலோ  சில்லறை திருட்டுகள் போய் கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.

  • பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவு ஏற்படும், மனசஞ்சலமும் உண்டாகும்.

  • சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடை பெற உள்ளது என்று அர்த்தம்

  • நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை  முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்று  அர்த்தம்.

  • ஒரு கழுதையின் மீது சவாரி செய்தால் உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் நட்பு வைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்

  • குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் வாழ்கையில் பணவரவு உயரும்.வாழ்க்கை சிறப்பாக அமையும்.

  • ஒரு குழந்தை அழுது கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் திட்டத்தில் எதோ குழப்பம் இருக்கின்றது என்று அர்த்தம்.

  • ஒரு குழந்தை அழுகும் மண்ணும் படிந்து காணப்பட்டால் உங்கள் நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள்  என்று அர்த்தம்.

  • குழந்தையை தாய் நீராட்டுவது போல் கனவு வந்தால் உங்கள் கடன் எல்லாம் வசூல் ஆகும்.

  • தொட்டிலில் குழந்தை உறங்கி கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியும் சந்தோசமும் நிறைந்ததாக  அமையும்.

  • ஒரு சிறைச்சாலை கனவிலே  காண நேர்ந்தால் உங்கள் மீது யாரோ வழக்கு தொடர இருகின்றார்கள் என்று அர்த்தம்

  • சிறைச்சாலைக்குள் யாரோ அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தவறு செய்து விட்டு மறைக்கப் பார்கிறீர்கள் 

  • நீங்களே  சிறைச்சாலைக்குள் அடைக்கப் பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள்.

  • உங்கள் கைகளில் விலங்கு மாட்டபடுவது போல் கனவு வந்தால் அளவுக்கதிகமாக ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.பல லட்சங்களை இழக்க வேண்டி வரும்.
  • இதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு.
  • அளவுக்கு அதிகமான சிக்கனம் கடைபிடிக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.

  • ஒரு காவல் நிலையம் கனவிலே வந்தால் சட்ட சிக்கலில் l  மாட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்

  • கப்பலில் பயணம் செய்து கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்கையில் அபாயகரமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

  • மூடப்பட்டு இருக்கும் கதவை கனவிலே பார்த்தல் உங்கள் தொழிலில் இடையுறாக இருந்தவர் விலகுகிறார் என்று அர்த்தம்

  • திறந்த கதவு மூடப்படும் கனவு வந்தால் உங்கள் தொழிலில் மறை முக எதிர்ப்பு கிளம்புகின்றது என்று அர்த்தம்.

  • பெரிய  புத்தகம் ஒன்றை படிப்பது போல் கனவு வந்தால் இல்லற நாட்டம் குறைந்து ஆன்மீக பிரச்சாரம் செய்ய போகின்றீர்கள் 

  • ஒரு மண்டை ஓடு கனவிலே வந்தால் உங்கள் முயற்சி வெற்றி அடைய போகின்றது.
  • ஒரு புற்றை கனவிலே காண நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றப் பட உள்ளீர்கள் 

  • இடி மழை கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பண செலவு ஏற்படும்.

  • யாரோ உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment