- கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
- உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
- நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
- விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
- பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சத்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
- ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிஸ்டம் தரக்கூடிய நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
- ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
- ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.
- பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
- அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.
- ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.
- அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படும்.
- காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.
- சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
- அல்லது காதலியின் பதிலுக்கு காத்திருந்தீர்கள் ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்.
- ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.
- கன்னி பெண் ஒருத்தி மங்கள பொருள்களை ஏந்தியபடி உங்கள் வீட்டுக்கும் நுழைவது போல கனவு வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடை பெற வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் பிச்சை எடுப்பது போல கனவு வந்தால் எதிர்பாராத நிலையில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் கோழி கிளி மைனா புற போன்ற பறவைகளை கனவிலே கண்டால் உங்களுக்கு திறமை இருந்தும் சோம்பேறிகளாக வளம் வருகிறீர்கள் என்று அர்த்தம்.
- கழுகு வல்லூறு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
- இந்த கனவுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு,உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி காரணமாக மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறமை படுவீர்கள்.
- நீங்கள் வலை வீசியோ கண்ணி வைத்தோ பறைவைகளை பிடிப்பது போல் கனவு வந்தால் நீங்கள் தேவை இல்லமால் மற்றவர்கள் விசயத்தில் தலை இடுகிறீர்கள் என்று அர்த்தம்.
- சிறைப் படுத்தப் பட்ட பறவை தப்பி ஓடுவதுபோல் கனவு வந்தால் உங்கள் மனதில் காரணமில்லாமல் இருந்து வந்த கலக்கமும் குழப்பமும் அகன்று விடும்.
- நீங்கள் உடம்பு முழுவதும் மணம் மிக்க சந்தனம் பூசி கொள்வது போல கனவு வந்தால் பெரும் புகழ் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
- குடை ஒன்றை தலைக்கு மேல் பிடிப்பது போல் கனவு வந்தால் நிரந்தரமான பாதுகாப்பான வாழ்க்கை சூழல்
- அமைய போகின்றது என்று அர்த்தம்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை சந்தித்து உரையாடுவது போன்று கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடைய இருக்கிறது என்று அர்த்தம்.
- உதாரணமாக விரோதியாக கருதியவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள்.
- உங்கள் உடலில் உள் காயம் ஏற்பட்டிருப்பதாக கனவு வந்தால் வெளிப்படையா நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் நெருப்பு சுட்ட புண் இருப்பது போல் கனவு வந்தால் உங்களிடம் நெருக்கமாக பழகும் ஒருவரே தலை மறைவாக உங்களுக்கு எதிராக செயல் படுகின்றார் என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிடுவது போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் பணவருவாயும் கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் காயத்துக்கு கட்டு போட்டு இருப்பதுபோல் கனவு வந்தால் பொருளாதார விசயத்தில் மற்றவர்களால் ஏமாற்ற பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- புதிதாக கம்பளம் ஒன்றை கனவில காண நேர்ந்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர் மரணம் அடைய கூடும்.
- கிழிந்து போன கம்பளம் கனவிலே வந்தால் சூதாட்டம் குதிரைபந்தயம் போன்றவற்றில் பணம் இழப்பு ஏற்படும்.
- உங்களுடைய நிழல் படம் கனவிலே கண்டால் உங்கள் புகழுக்கு இழுக்கு வர கூடும் .
- பெரிய மாளிகை கனவிலே காண நேர்ந்தால் பெரிய மனிதர் தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.
- சிறிய குடிசை ஒன்றை கனவிலே கண்டால் பொருளாதார சிக்கலில் இருந்து விடு படுகிறீர்கள் என்று அர்த்தம்.
- மனதிற்கு அச்சமூட்டும் வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இது நாள் வரை இருந்து வந்த சிக்கலும் சங்கடங்களும் கவலைகளும் அகன்று நிம்மதி அடைவீர்கள்.
- வாய் விட்டு அழுவது போன்று கனவு வந்தால் தீராத வியாதி ஒன்று தீர்வது ஆகும்.
- நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும்.
- இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும்.
- உங்கள் குடும்பத்தினர் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் தொந்தரவும் கஸ்ரங்களும் உருவாக்கலாம்.
- சின்னஞ்சிறுவர்கள் சண்டை போடுவதாக கனவு வந்தால் நீங்கள் அவசியம் இல்லாத விசயத்தில் தலை இடுவதாக அர்த்தம்.
- நீங்கள் யாரையாவது அடிக்க செல்வது போல் கனவு வந்தால் உங்களை பற்றி அதிகம் எண்ணி கொண்டு இருக்கிறீர்கள் அன்று அர்த்தம் இந்த மனப்பாங்கை மாற்றி கொள்வது அவசியம்.
- உங்கள் காதலருடன் காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது முரட்டுக்காளை ஒன்று முட்ட வருவது போல் கனவு வந்தால் உங்கள் காதலுக்கு பெரும் இடையுறு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார்.
- இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர் நட்பு உங்களுக்கு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழ் அடைய இருகின்றீர்கள் என்று அர்த்தம்.
- பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
- ஒரு புல்லங்குழல் கனவில வந்தால் உங்கள் மனம் உறுதி அற்றது என்று அர்த்தம்
- நாதஸ்வரம் கனவிலே வந்தால் உங்களுக்கு தொலைவில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்
- மிருதங்கம் தபேலா மேளம் போன்ற தோல் கருவிகள் கண்டால் நீங்கள் முதல் மனிதனாக ஆசை படுகிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஆசை நிறைவேறும்.
- ஒரு இனிமையற்ற சங்கீதம் கனவிலே வந்தால் உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
- ஒரு கைப்பெட்டி சாலையில் கிடக்க கனவு வந்தால் உங்கள் மீது வீண் பழி ஏற்பட வாய்புள்ளது.
- யாராவது ஒருவர் கைபெட்டியை உங்களுக்கு தருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாரத உதவி கிடைக்கும்.
- ஒரு கைப்பெட்டி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி காணப்பட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- நல்ல பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் கடவுள் அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
- மலைப்பாம்பு கனவிலே வந்தால் உங்கள் தொல்லைகள் பிணிகள் எல்லாம் அகலும் வாய்ப்புள்ளது.
- தண்ணிப்பாம்பை கனவிலே பார்த்தல் உங்களை பயமுறுத்தியே மற்றவர் காரியம் சாதித்து கொள்வர்.
- ஒரு சுண்டெலி ஓடிகொண்டிருபது போல் கனவு வந்தால் உங்கள் முயற்சி தாமதமாக நடை பெற்று கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்
- பெருச்சாளியை கனவிலே கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய் வாய்பட நேரிடும்.
- பெருச்சாளியை நீங்கள் கையாலே எடுப்பது போல் கனவு வந்தால் உங்கள் தொழிலில் தவறான நடைமுறைகளை கையாளுகிறீர்கள் என்று அர்த்தம்
- பெருச்சாளி கடிப்பது போல் கனவு வந்தால் உங்குகு நெருக்கமான உறவினரிடமிருந்து பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது.
- ஒரு தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போகின்றது என்று அர்த்தம்.
- ஒரு தேரையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் விரோதிகள் செய்யும் முயற்சி அவர்களுக்கே பாதகமான பலன்கிடைக்கும்.
- ஒரு தேள் கொட்டி விட்டது போல் கனவு வந்தால் ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
- பல்லி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் பதவி ஆட்டம் காண போகின்றது என்று அர்த்தம்.
- முட்செடி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறீர்கள் என்று அர்த்தம்.
- மலர்செடிகள் பூந்தோட்டம் கனவிலே வந்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.
- மருதாணி கனவிலே கண்டால் உங்கள் உடல் நலம் சீராகும்.
- துளசி செடி கனவிலே கண்டால் உங்கள் துன்பம் எல்லாம் கடவுள் ஆசீர்வாதத்தால் பறந்தோடும்.
- தானிய மணிகளை எலி கொறிப்பது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிலோ வியாபாரத்திலோ சில்லறை திருட்டுகள் போய் கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.
- பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவு ஏற்படும், மனசஞ்சலமும் உண்டாகும்.
- சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடை பெற உள்ளது என்று அர்த்தம்
- நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- ஒரு கழுதையின் மீது சவாரி செய்தால் உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் நட்பு வைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
- குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் வாழ்கையில் பணவரவு உயரும்.வாழ்க்கை சிறப்பாக அமையும்.
- ஒரு குழந்தை அழுது கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் திட்டத்தில் எதோ குழப்பம் இருக்கின்றது என்று அர்த்தம்.
- ஒரு குழந்தை அழுகும் மண்ணும் படிந்து காணப்பட்டால் உங்கள் நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று அர்த்தம்.
- குழந்தையை தாய் நீராட்டுவது போல் கனவு வந்தால் உங்கள் கடன் எல்லாம் வசூல் ஆகும்.
- தொட்டிலில் குழந்தை உறங்கி கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியும் சந்தோசமும் நிறைந்ததாக அமையும்.
- ஒரு சிறைச்சாலை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் மீது யாரோ வழக்கு தொடர இருகின்றார்கள் என்று அர்த்தம்
- சிறைச்சாலைக்குள் யாரோ அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தவறு செய்து விட்டு மறைக்கப் பார்கிறீர்கள்
- நீங்களே சிறைச்சாலைக்குள் அடைக்கப் பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள்.
- உங்கள் கைகளில் விலங்கு மாட்டபடுவது போல் கனவு வந்தால் அளவுக்கதிகமாக ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.பல லட்சங்களை இழக்க வேண்டி வரும்.
- இதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு.
- அளவுக்கு அதிகமான சிக்கனம் கடைபிடிக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.
- ஒரு காவல் நிலையம் கனவிலே வந்தால் சட்ட சிக்கலில் l மாட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்
- கப்பலில் பயணம் செய்து கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்கையில் அபாயகரமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
- மூடப்பட்டு இருக்கும் கதவை கனவிலே பார்த்தல் உங்கள் தொழிலில் இடையுறாக இருந்தவர் விலகுகிறார் என்று அர்த்தம்
- திறந்த கதவு மூடப்படும் கனவு வந்தால் உங்கள் தொழிலில் மறை முக எதிர்ப்பு கிளம்புகின்றது என்று அர்த்தம்.
- பெரிய புத்தகம் ஒன்றை படிப்பது போல் கனவு வந்தால் இல்லற நாட்டம் குறைந்து ஆன்மீக பிரச்சாரம் செய்ய போகின்றீர்கள்
- ஒரு மண்டை ஓடு கனவிலே வந்தால் உங்கள் முயற்சி வெற்றி அடைய போகின்றது.
- ஒரு புற்றை கனவிலே காண நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றப் பட உள்ளீர்கள்
- இடி மழை கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பண செலவு ஏற்படும்.
- யாரோ உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.
Thursday, September 22, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment