Mind relaxing

Tuesday, June 27, 2017

கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி)
இதனை நாய் துளசி என்று கூறுவதுண்டு_
இது வேம்பு வைப் போலவே மனதிலும் உடலிலும் வேலை செய்யக் கூடியது
இரைப்பை, நூரையீரல், சர்மம், மனோ சம்மந்தப்பட்ட நரம்பு மண்டலம். ராஜ உறுப்புகள் நன்கு வேலை செய்யக் கூடியது. அத்துடன் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுடையது. வியர்வைகளை பெருக்கி உடலை உடலைத் தூய்மையாக்கும்
கஞ்சங்கோரையின் நறுமணம் மனதிற்கு அமைதியையும் சாந்த குணத்தையும் அளிக்கக்கூடியது.
இதனை துறவு பூண்ட சன்னியாசிகளும், பிரம்மசாரிய விரதம் அனுஷ்டிப்பவர்களும் கை கொண்டு புழங்டுவார்கள்.
சம்சாரத்திலுள்ளவர்களும் உபயோகிக்கலாம் , முடிவு பெறாத பல இச்சைகளை எண்ணி நாய் போல் அலையும் மனதை தூய்மைப்படுத்தி, ஒழுக்கத்தையும் மன அமைதியை உண்டாக்கும்.
உலகியல் மாயையில் விட்ட கன்ற துறவிகளின் மூம்மலத்தை நீக்கி, இன்பம் பொருள்களில் மனம் பற்றவிடாமல் பேரின்ப என்ணங்களை தூண்ட உதவுகிறது என்பது பல சித்தர்களின் கருத்து .
பேய் பிசாசு என்ற ஆவேசம் பிடித்தவர்களுக்கு வேப்பிலையால் அடித்து ஒட்டுவது போலவே. இந்த நாய்துளசி இலையை பிதற்றல், பாடல், சினத்தல் , ஓடல்' தொடர் பற்ற பேச்சுகளை பேசிக் கொண்டிருந்தல் ஆகியன போன்ற சித்தப் பிரமை பிடித்தவர்களுக்கும் பைத்தியம் பிடித்தவர்களுக்கும் தலையில் கட்டி வைக்கவும் படுக்கையில் போட்டு வைப்பதாலும் மேல் கண்ட நோய் நீங்கும்.
வீடுகளில் சேரும் பூச்களை ஓழிக்க நாள்தோறும் இறை வணக்கம் என்ற பழக்கத்தை உண்டாக்கி , சாம்பிராணி தூபம், தீபம் , ஊதுபத்தி முதலானவைகளை போடுவதால் பூச்சிகள் இந்த நறுமணம் சகிக்காமல் வீட்டை வீட்டு வெளியேறிப் போகிறது. அதோடு நமது பழிவாங்கும் நினைவு இறை வாழிபாட்டினால் அமைதி பெறுகிறது , கஞ்சங்கோரை மூட்டைப் பூச்சிக்கு பரம எதிரி ஆகவே இதை நாள் தோறும் கொண்டு வந்து கசக்தி வீட்டின் மூலை முடுக்குகளில் போட்டு வைக்க வேண்டும் i பத்து நாள் தொடர்ந்து போட இதன் நறுமணம் வீட்டைச் சுற்றியுள்ள மூட்டைப்பூச்சிகளையும் , கொசுக்களையும் அழித்து விடும். செய்து பாருங்கள் !
சிலருக்கு உடம்பெங்கும் ஒரு வித பேன் பிடிப்பதுண்டு. இந்த பேன் சாதரணமாக தலைப்பேன் போல் இல்லாமல் கடல் நண்டு உருவ அமைப்புடன் மிகவும் நுண்ணியதாக இருக்கும். கண் புருவம், இமைகள் ,மர்ம உறுப்புகளில் உள்ள ரோமங்கள் கால், கை, மார்புகளில் உள்ள ரோமங்கள் ஆகியவைகளில் உ ணிகள் போன்று கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் நமைக்கும் போது சொறிந்தால் தோலுடன் பிய்த்துக் கொண்டு வரும்
இந்த பேன் பிடித்தவன் வாழ்கை அதோ கதிதான் நிறைவேறாத பல ஆசை நினைவுகளில் ஈடுபட்டு மனம் உடையவனாகி இவனை தரித்திரமும், நோய்களும் பிடுங்கித் தின்னும், -
இந்த பேன் தொலைய வேண்டுமானால் கஞ்சாங்கோரை இலையை அதன் கதிர்களும் சேர்த்து ஒரு துண்டு வசம்பு சேர்ந்து இடித்து தூளாக்கி அதில் கலந்து இரண்டும் மை போல் அரைத்து உடம்பெங்கும் தடவிக் கொண்டு 1 மணி நேரம் சென்று குளிர்ந்த நீரில் குளிக் வேண்டும். இப்படி 10 நாள் குளித்தால் பேன் ஒழிந்து போகும், சீலைப்பேன் என்று, சொல்லப்படும் ஒரு வித வெள்ளை பேன்களும் இதனால் நீங்கும்.
மார்ச் சளி ' ., காசம், இருமல், ஆரம்ப நிலை ரோகம், ஆகியவைகளுக்கு ஆறு மிளகு, கஞ்சாங்கோரை இலை இரண்டு ரூபாய் எடையும் எடுத்து நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து கொடுக்க சரியாவும் வெளியே வந்து குணமாகி விடும்.
இதன் இலையை நிறைய சேகரித்து எடுத்துலர் த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு தினம் காலை நேரத்தில் ஒரு வேளை காபி பொடி போடுவது போல் பால், சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காய்ச்சி குடித்து வரலாம். இதனால் வியர்வை நாற்றம் போகும்: உடலும் தூய்மையாகும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ, மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை
Posted by Mind relaxing at 27 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: மூலிகை பொடிகளின்
மூலிகை குளிக்கும் தூள்
மூலிகை குளிக்கும் தூளிலுள்ள மூலப் பொருட்கள் இயற்கையான சருமத்தினைக் கொடுப்பதுடன் தோலிற்கு பாதுகாப்பு மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரை இவற்றைப் போக்கி அரோக்கியம் தரும்.
|
1 - உசிலை இலை ( அரப்பு) - 250 கி
2 . பூந்திக் கொட்டை - 250 கி
3 . சிகைக்காய் - 500 கி
4. பாசிப்பயறு - 500 கி 5. கஸ்தூரி மஞ்சள் 25 கிராம்
6. பூலாங்கிழங்கு 50 கி
7வேப்பிலை 100 கி
8. ரோஜாப்பூ 100 கி
மேலே உள்ள பொருள்களை தனித்தனியாக உலர்த்தி பொடித்து அரைத்து கலந்து பத்திரப்படுத்தி தேவையான அளவில் பயன்படுத்தலாம்
சருமத்தை பள பளக்கக் செய்து நோய் கிருமிகளில் பாதுகாக்கிறது. இயற்கை நறுமணம் கொண்டது உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளிக்கலாம்
Posted by Mind relaxing at 27 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: மூலிகை பொடிகளின்

Saturday, June 24, 2017

சகுனம்
ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம் என எத்தனை வகைகளில் பிரித்து ஜோதிடம் சொன்னாலும் நம் பெரியோர்களின் சகுன சாஸ்திரம் பார்த்து கணிக்கும் கணிப்பு இவைகளுக்கு ஈடாகுமா.காலையில வெளியே போகும்போதே சகுனம் சரியில்லை..அதே மாதிரியே இன்னிக்கு நஷ்டகணக்குதான் ஆச்சு..என்றும்பேசிக்கொள்வார்கள்,



பொண்ணு பார்க்க போனோம்..போற வழியில பாம்பு பார்த்தோம்...அதனால் வழித்த்டம் சரியில்லை என பல கல்யாணங்கள் கிராமப்புறங்களில் நின்றும் போயிருக்கின்றன...இந்த தகவலை பெண் வீட்டாருக்கு சொல்ல,வழித்தடம் சரியில்லை..அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என நினைக்கிறோம்...என ஒரு கடிதம் எழுதிவிட்டு கேன்சல் செய்துவிடுவார்கள்..பெண் வீட்டாரும் இதை புரிந்து கொண்டு விடுவார்கள்.பல வேறு காரணங்களுக்கும் பொய்யாக இந்த காரணத்தை சொல்வதும் உண்டு...வழித்தடம் சரியில்லை என சொல்லிவிட்டால் ஒன்றும் கேள்வி கேட்க முடியாது இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இன்றும் கிராமங்களில் உண்டு.

எங்கள் கிராமத்தில் என் அத்தையை பெண் பார்க்க வந்த கதை பற்றி எங்கள் பாட்டி சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது...கரூர் அருகில் காவிரி,அமராவதி என இரு ஆறுகளும் கூடும் இடத்தில்,ஆற்றின் ஓரம் இருக்கும் சிறு கிராமம் அது..அத்தையை பெண் பார்க்க வந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதும்,வீட்டில் இருந்த வளர்ப்பு பூனை உத்திரத்தில் தூங்கியது,அப்படியே தூக்க கலக்கத்தில் தரையில் விழுந்து இறந்து போனது..அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.அதே மாதத்தில் அது 1970 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..அமராவதி ஆற்றில் பெரு வெள்ளம் வந்து,இவர்களது வயல்வெளிகள் நாசமானது..அந்த நஷ்டத்திலிருந்து மீள ஒரு வருசம் ஆனது.அப்போதும் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட்டார்களே ஒழிய நிறுத்தவில்லை..நல்ல சம்பந்தம்.அரசாங்க வேலை.விட வேண்டாம் என திருமணத்தை முடித்தார்கள்.திருமணத்திற்கு பின் என் அத்தை பட்ட கஷ்டங்கள் ரொம்ப கொடுமை.அவருக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன.நகையை சூதாடி அழித்தார்.மாமியார் வீட்டில் திருடினார்.வீட்டுக்கு வராமல் 6 மாதம் தலைமறைவாக இருந்தார்.இதனால் என் அத்தை பிறந்த வீட்டிற்கே வர வேண்டியதாயிற்று.

பெண் பார்த்து விட்டு போனதும் வீட்டுப்பூனை இறந்தது,வெள்ளத்தால் பயிர் நாசம் இவையெல்லாம் சகுனங்களே..இயற்கை இவர்களுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என உணர்த்தியது.

நமக்கு வரும் துன்பங்களை இயற்கையே முன்கூட்டி உணர்த்தும்.அதை தெய்வமாகவும் நினைக்கலாம்..முன்னோர்கள் வழிகாட்டுவதாகவும் எண்ணலாம்...சகுனம் என்றும் சொல்லலாம்...


Posted by Mind relaxing at 24 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சகுனம்

சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்

நல்ல நேரம் வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

15 ஆம் தேதி சூரிய உதயம் காலை 6.45 க்கு உதயமாகும் அதன்பின் காலை 9 .35 முதல்1 1மணி வரை சூரிய பொங்கல் வைத்து வழிபடலாம்....ராகுகாலம் 11 .13 க்குதான் துவங்கும்..உத்திராயண புண்ணியகாலத்தில் சூரியன் வடக்கு நோக்கி செல்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..நம் தர்ம செயல்களுக்கு பல ம்டங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதால் அன்று சூரியனை வழிபட்டு இயற்கையை வனங்குகிறோம்..சூரியன் தான் இவ்வுலகை ரட்சிக்கும் மூலகர்த்தா.. நம் உடலில் உள்ள நுணுக்கமான செய்ல்பாடுகளின் ஆதார சக்தி அவர்தான்...அவரை வணங்குவதால் ஆயுள் பெருகும்..ஆரோக்கியம் உண்டாகும்...!!!

பொங்கலன்று குலதெய்வம் கோயில், இஷ்ட தெய்வ கோயில் செல்லலாம் ..சுப காரியங்கள் தொடங்க ஆகாது..தை 6 சுபகாரியங்கள் செய்யலாம்!! அன்று ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய சுபநாள் ஆகும்..கணவன் மனைவி ஒற்றுமைக்கு ரோகிணியில் வரும் சுபமுகூர்த்தமே சிறப்பானது..அதாவது சந்திரனின் நட்சத்திரமாக இருப்பின் மிக விசேசம்..ரோகிணி,அஸ்தம்,திருவோணம் எல்லாம் மிக உயர்ந்த நாட்கள்..

சகல தோசங்களும் பாவங்களும் விலக;

சாஸ்திர ரீதியாக உத்திராயண காலம் என்பது ரதசப்தமி அன்று தான் துவங்குகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.
தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள்.இதனால் கடுமையான பாவங்களும் தோசங்களும் தீரும்..

ரதசப்தமி ஸ்நான‌ம்
7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள், அட்சதை, மஞ்சள் தூள், சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பெற்றோர் இல்லாதவர்கள், எள், பச்சரிசி, சேர்க்க வேண்டும். இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

வரும் 14.2.2016 அன்று ரத சப்தமி வருகிறது அன்று காலை பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் தேர் கோலம் போடுவது மிகவும் சிறப்பு. 

தை அமாவாசை அன்னதானம்;

கடந்த சில ஆண்டுகளாக ஆதரவற்ற காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் செய்து வருகிறோம்...சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊனமுற்ற குழந்தைகள்,ஆதரவற்ற முதியோர்களுக்கு வரும் தை அமாவாசை அன்றும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்...தான தர்மம் தை அமாவாசையில் செய்வது பெரும் புண்ணியம்..புண்ணிய பலன் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்...உங்களுக்கு விருப்பமான முடிந்த தொகையை அன்னதானத்துக்கு அனுப்பலாம்...புகைப்படங்கள்,தகவல்கள் அமாவாசை முடிந்ததும் பதிவேற்றப்படும்.
Posted by Mind relaxing at 24 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வினை தீர்க்கும் நாயகனே

Friday, June 23, 2017

முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. எதிர்காலம் என்னும் பாதையின் மேடு பள்ளங்களை, நேரான, வளைவு மற்றும் திருப்பங்களை நமக்கு காட்டும் எச்சரிக்கை பலகை.
நமது கர்மத்தின் அடிப்படையிலேயே நம் வாழ்க்கை அமைகிறது. கர்மம் என்பது ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியம்.
ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம்
பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்மபத்ரிகா.
அப்படியானால் அவரவர் செய்த செயல்களே கஷ்ட சுகங்களுக்கு காரணம் என்றாகிறதல்லவா? நம் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? நம்மை இதைத்தான் செய்ய வேண்டும் என்று தலையில் எழுதிவைத்துவிட்டு அதன் படியே நம்மை செயல்படவும் வைத்துவிட்டு அந்த கர்மத்தையும் நம்மையே அனுபவிக்க சொல்கிறதா இந்த விதி? (அ) கிரகம்? (அ) கடவுள்?
நிச்சயமாக இருக்காது. முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் அதனால் அதன் பலனான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு, அதை திருத்திக்கொண்டு, இப்பிறவியில் நல்லதை செய்யவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவன் இன்று காலை எழுந்தவுடன் காபி குடிப்பானா? (அ) டீ குடிப்பானா? குளிப்பானா? குளிக்க மாட்டானா? போன்ற எல்லாவற்றையுமா நம்மை படைத்தவன் எழுதி வைத்திருப்பான்? அப்படியானால் ஒரு மனிதன் இன்னின்ன தீமைகள் செய்வான் என்றும் அவன்தானே எழுதியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் அவனே எழுதி வைத்துவிட்டு, அதன்படி செய்யவும் வைத்துவிட்டு, பலனை (அந்த கர்மத்தை?) மட்டும் மனிதனையே அனுபவிக்க சொல்கிறானா இறைவன்?
காபி குடிப்பதா (அ) டீ குடிப்பதா? என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் நமக்கு அளித்துள்ளான். அதைப்போல்தான் நல்லதையோ, கெட்டதையோ எதை செய்யும் உரிமையையும், சுதந்திரத்தையும் இறைவன் அளித்துள்ளான். நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆராய்ந்து பார்க்கும் அறிவையும் கொடுத்துள்ளான். அதில் ஏதாவது ஒன்றை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம்.
நாம் எதை தேர்ந்து எடுக்கிறோமோ அதற்கு நாமே பொருப்பாகிறோம்.
அதனால் ஏற்படும் விளைவுகள்களுக்கும் நாமே காரணமாகிறோம்.
கர்மம் என்பது சில அடிப்படை விதிகளோடு நம்மை படைத்துள்ளது.
நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பாக்கியங்களில் சிலவற்றில் பணம், படிப்பு, அப்பா, அம்மா, உடன்பிறப்பு, உறவு, நட்பு, புகழ், திருமணம், குழந்தைகள், தொழில், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், போன்றவைகளில்ஏதோ ஒன்றோ (அ) பலதோ அமையாமல் போகலாம். (அ) சிலது அமைந்ததாலேயே பிரச்சனைகளும் உருவாகலாம். ஒன்று மட்டும் நிச்சயம். குறை இல்லாதவர் எவருமில்லை. இதை ஜாதகத்தின் மூலம் ஓரளவுக்கு தெரிந்தும் கொள்ளலாம். ஓரளவுக்கு என்று நான் சொல்ல காரணம் இருக்கிறது. எது முற்றிலும் நமக்கு நிராகரிப்பட்டது என்று தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்குமில்லை.
(ஒரு ஜோதிடன் என்ன நடக்கும் என்று கோடிட்டுக் காட்டலாமேயன்றி, இதுதான் நடக்கும் என்று அறுதியிட்டோ அல்லது சவால்விட்டோ சொல்லக்கூடாது.

ஜோதிடத்தின் முதல் விதி இதுதான். 
கோர்ட்டில் ஒரு குற்றவாளிக்கு, அவன் செய்த ஏதோ ஒரு குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை தருகிறார்கள். ஜெயிலில் இருக்கும் காலங்களில் அவன் தன் தவறை உணர்ந்து, திருந்தி நல்லபடியாக இருந்தால் தண்டனை காலத்தை குறைக்கிறார்கள். அவனுடைய நன்னடத்தைக்கு உண்டான பலன் அவனுக்கு கிடைக்கிறதல்லவா?
ஒருவேளை அவன் அங்கேயும் திருந்தாமல் மேலும் ஒரு பெரிய குற்றத்தை (கொலை ) செய்தால் என்னவாகும்? ஆயுள் தண்டனையோ அதற்க்கும் மேலோ தண்டனை கிடைக்கும். தண்டனை காலம் குறைவதற்க்கும், அதிகரிப்பதற்க்கும் அவனுடைய செயல்பாடுகளே காரணமாகிறது.
இதில் தீர்ப்பு என்பதே ஜாதகம்.
தண்டனையை நிறைவேற்றும் அரசாங்கமே கிரகங்கள்.
செயல்பாடுகளே (நன்னடத்தை) பரிகாரங்கள்.கெட்ட நடத்தை என்பது பாவங்கள்.
தண்டனையை குறைக்கும் (அ) கூட்டும் நீதிபதிகளே கடவுள்.
ஜாதகம் உண்மை. பரிகாரம் உண்மை. கடவுள் உண்மை. நமது முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும் என்பதும் உண்மையிலும் உண்மை.
இவைகளை புரிந்து கொள்வது சற்று கடினம்.
மொபைலில் கால்ரேட் ஆஃபரை போல.
மஹாபாரதத்தில் சகாதேவன் கூட ஜோதிடன்தான். அவன் துரியோதணனுக்கு சரியான நேரத்தையே குறித்து கொடுத்தான். ஜோதிடம் பலிக்காது என்றால் கிருஷ்ணர் ஏதும் அதற்கு மாற்று செய்யாமல் விட்டிருப்பாரே? அவர் ஏன் சூர்ய சந்திரரை ஒரே இடத்தில் வரவைத்து ஒரு நாள் முன்னதாக அமாவாசையை உருவாக்கவேண்டும்.
இப்படி யோசியுங்கள். துரியோதணன் தன் எதிரியிடமே சென்று மாபெரும் யுத்தத்திற்கு நேரம் கேட்கிறான். சகாதேவன் கூறிய அதே நேரத்திலேயே பூஜையும் செய்கிறான். அவனுக்கு ஜோதிடத்தின் மேலும், அதை சொல்பவன் மேலும் எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனாலும் யுத்தத்தில் தோற்கிறான். அவன் தர்மத்திற்கு எதிராக இருந்ததும், கடவுளின் துணை இல்லாமல் போனதும்தான் காரணம்.
இதைத்தானே, திருஞானசம்பந்தர்,
வேயுறு தோளி பங்கன். ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. என்றும்,
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும்
பாடலில் அருணகிரிநாதரும் கூறியுள்ளார்கள்.
எல்லாமே தீர்மானிக்கப்பட்டிருந்தால் நமது செயல்கள் அர்த்தமற்றதாகி விடும். நாடகமே உலகம் அதை நடத்துபவன் இறைவன் என்பார்கள். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நாம் தினம் தினம் என்னென்ன செய்வோம் என்று அவனே script எழுதி வைத்துவிட்டு, அதன்படியே நடப்பதை வேடிக்கை பார்த்தால் அதிலென்ன சுவாரசியம் இருக்கப்போகிறது
காதலிக்கவில்லை என்பதற்காக ஒரு இளம்பெண் மீது நீ ஆசிட் ஊற்றுவாய் என்று ஒருவன் ஜாதகத்தில் இறைவன் எழுதி வைத்திருப்பானா?
பிஞ்சு குழந்தைகள் 94 பேர் மொத்தமாக பள்ளியில் தீக்கிறையாகி, அலறி துடித்து உடல் வெந்து கருகிப்போவதற்க்கு கிரகங்கள் துணை போகிறதா?
இலங்கையில் படுகொலையாகி சவமான ஒரு பெண்ணிடம், அவள் இறந்ததுகூட தெரியாமல், அவள் குழந்தை பசியால் பால் குடிக்கமடியில் கிடக்கும் காட்சிகள் உருவாக யார் காரணம்?
இந்த நாட்டிலேயே எத்தனை கற்பழிப்புகள்? எத்தனை வன்முறைகள்?
இவைகளை எல்லாம் கிரகங்கள் தூண்டி விடுகின்றதா? அதை ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானா?
எல்லாவற்றுக்கும் மனிதனின் பேராசை, வக்ர புத்தி.தீய எண்ணங்கள், சுயநலம், போன்றவைகளே காரணம்.
இறைவன் எல்லாவற்றையும் எழுதி வைக்கவில்லை. நமது முன்வினைப்படி சில பாக்கியங்கள் மறுக்கப்பட்டதை தவிர.
எல்லா விளைவுகளுக்கும் நாமே காரணம்.
நம் முன்னோர்கள் சொன்னார்கள் எண்ணம் போல வாழ்வு என்று. நமது எண்ணங்களும், அதனால் உருவாகும் செயல்களுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சில நேரம் நல்லவைகள் நடக்காமல் போகலாம். அதையே கிருஷ்ணர் கீதையில் சொன்னார். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று.
ஒருவன் தோற்றுப்போக எந்த ஆதரவும் தேவையில்லை. ஆனால்
வெற்றிபெற பல வழிகளில் யோசித்து, பல ஆதரவை பெறவேண்டி வரும்.
புயல் வீசும், பலத்த மழை வரும் என்று வானிலை எச்சரிக்கை தருவது போல்தான் ஜோதிடம். அப்போதைய நேரம் நமக்கு சாதகமாக இருக்கிறதா, பாதகமாக இருக்கிறதா, என்று பார்த்து நம்மை தயார் படுத்திக்கொள்ள உதவும் ஒரு உன்னத சாஸ்திரம்.
ஜாதகத்தில் நல்லது நடக்கும் என்று இருந்தால் அதற்கு நடப்பதற்கு உண்டான செயல்களை செய்வோம்.
தீயது நடக்கும் என்று இருந்தால் அதை தடுக்க, தவிர்க்க உண்டான செயல்களை செய்வோம்.
ஜாதகத்தை பார்த்து நமது முன்னேற்றத்திற்கு தடை ஏதும் இருந்தால், நம் வசதிக்கேற்ப பரிகாரம் (இறை வழிபாடும், தான தர்மங்களுமே பரிகாரம் என்பது) செய்து கொண்டு இறைவனை வணங்கி, இறைவனின் துணையோடு, நமது எண்ணங்களை தூய்மையாக்கி கொண்டு, தன்னம்பிக்கையோடும், உறுதியோடும் கஷ்டங்களை எதிர்த்து போராடி, வாழ்க்கையில் வெற்றி பெருவோம். (நிம்மதியாக இருப்பதுகூட வெற்றிதான்.) நல்ல செயல்களால் இறைவனின் அனுகிரகத்தை பெருவோம்.
நாட்டாமையிடம் (இறைவன்) தீர்ப்பை (கர்மபலன்) மாற்றி எழுத வைப்போம்.
நமது எண்ணங்களே நமது செயல்கள். நமது செயல்களை பொருத்தே நமது எதிர்காலம். அதை நாமே தீர்மானிக்க முயற்சிப்போம். பலனை எதிர்பாராமல்.
Posted by Mind relaxing at 23 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வினை தீர்க்கும் நாயகனே

மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ”
-----------------------------------------------------------------------------
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் ” மகாலிங்கமானார்”. இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.
புற்றுநோய் தீர்க்கும் ” திருந்துதேவன் குடி அருமருந்தம்மை
-----------------------------------------------------------------------------------------------
”
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடன் தொல்லைகள் தீர்க்கும் ” திருச்சேறை ருண விமோச்சனர்
----------------------------------------------------------------------------------------------------”
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருண விமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது
. இச் சந்நதியின் முன் நின்று ” கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்
சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் ” சூலினி, பிரத்தியங்கரா
சமேத சரபேஸ்வரர் ”
-----------------------------------------------------------------------------------------------
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் ” திருபுவனம் ” சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய “ஸ்ரீவாஞ்சியம்”
----------------------------------------------------------------------------------------------
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.
அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.
தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் ” திருநல்லம் ”
------------------------------------------------------------------------------------------------------
முக்கண்ணன் ” உமா மகேஸ்வரராய் ” மேற்கு நோக்கி வீற்றிருக்க, ” அங்கவள நாயகியாய் “அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். ” பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் “என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், ” ஸ்ரீ வைத்திய நாதர் ” சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
தீரா நோய்கள் தீர்க்கும் “வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்
----------------------------------------------------------------------------------------------------”
மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் ” வைத்தீஸ்வரன் கோவில் “. செவ்வாய் தோஷம் நீக்கும் ” அங்காரகனுக்குரிய ” திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் “தன்வந்திரி” இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.
செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை”
----------------------------------------------------------------------------------------------
கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்
------------------------------------------------------------------------
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் “கூத்தனூர்”. நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை – திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.-------------------------------------------------------------------------------------------------------------------------------
நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்
காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்
கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்
கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் “ஜூரகேஸ்வரர்
”
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்
ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி
மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்
குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்
விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
Posted by Mind relaxing at 23 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வினை தீர்க்கும் நாயகனே
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல
வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
Posted by Mind relaxing at 23 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வாஸ்து வாழ்கவளமுடன்

வாஸ்து

வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்?

vaastu
முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

ஜன்னல்கள்:

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.
2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.
7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

சமையலறை:

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.
2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.
4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.
6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.
8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.
10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

கழிவறைகள்:

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.
2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.
3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.
4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.
6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

Posted by Mind relaxing at 23 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வாழ்க வளமுடன்

Thursday, June 22, 2017

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.
இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....
1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?
நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.
2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.
3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?
குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.
4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.
5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?
நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.
6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?
இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.
8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.
உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 100 வழிகளை சொல்கிறது இந்த தளம். படித்து பாருங்களேன்! http://wateruseitwisely.com/100-ways-to-conserve/index.php
Posted by Mind relaxing at 22 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பொது நலன்
சப்தமி 
சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில்,
இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு
வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும்,
அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும்,
அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.
சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு
ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன்
அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.
பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும்
அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும்.
சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து
உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம்.
அதற்குப்பின் சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும்.
அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம்
உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.
எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது.
சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து
அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும்.
 சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது
சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும்
தேர்க் கோலம் போடுவது பலரது வழக்கம்.
இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை
தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில்
சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது
நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை.
இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.
பார்வைக்குத் தெரியும் பகவானை பகலவனை ரதசப்தமி தினத்தில்
வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!
என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என
யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன்.
ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்
Posted by Mind relaxing at 22 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வினை தீர்க்கும் நாயகனே
 கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!!
நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும். காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி
சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.
உப்பு தண்ணீரின் மகிமை
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.
செப்பு காசின் மகிமை
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை”
சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம்
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம்
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது. வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது. இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும்.
உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை
சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று. திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும்.
இதற்கு பரிகாரம்,
ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும். அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நீங்கும்.
6 Likes11 Shares

Posted by Mind relaxing at 22 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: செய்வினையை நீக்கியது

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..
ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத்தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.
அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.
எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.
தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.
வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப்பெற்று மகிழ்வுடன்வாழலாம்
1 Like11 Shares


Posted by Mind relaxing at 22 June No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பைரவரை வழிபட்டால்
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • பொது நலன் (7)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை தைலம் (1)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வரலாறு (3)
  • வளமுடன் (4)
  • வாழ்க (3)
  • வாழ்க வளமுடன் (4)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Blog Archive

  • ►  2023 (2)
    • ►  July (2)
  • ►  2021 (1)
    • ►  April (1)
  • ►  2019 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2017 (87)
    • ►  December (12)
    • ►  November (4)
    • ►  August (3)
    • ►  July (40)
    • ▼  June (18)
      • கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) இதனை நாய் துளசி எ...
      • மூலிகை குளிக்கும் தூள் மூலிகை குளிக்கும் தூளிலு...
      • சகுனம் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம...
      • சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம் ந...
      • முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்ட...
      • மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ”---------...
      • 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02....
      • வாஸ்து வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழ...
      • உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற...
      • சப்தமி சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்...
      •  கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!! நன...
      • சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் ...
      •  2500 ஆண்டுகளுக்கு முன்பே யூகிமுனிவர் கருத்தரித்...
      • கோவிலில் செய்ய கூடாதவை.... 1.கோவிலில் தூங்க க...
      • லால் கிதாப் பரிகாரங்கள் வடஇந்தியாவ...
      • ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி
      • ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகள...
      • முருகன் குறித்த பழமொழிகள் <!--more--> வேலை வணங்கு...
    • ►  May (9)
    • ►  February (1)
  • ►  2016 (52)
    • ►  October (24)
    • ►  September (28)

About Me

Mind relaxing
View my complete profile

Total Pageviews

Labels

  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • பொது நலன் (7)
  • வளமுடன் (4)
  • வாழ்க வளமுடன் (4)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • வரலாறு (3)
  • வாழ்க (3)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • மூலிகை தைலம் (1)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Translate

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • பொது நலன் (7)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை தைலம் (1)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வரலாறு (3)
  • வளமுடன் (4)
  • வாழ்க (3)
  • வாழ்க வளமுடன் (4)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா
  • எவற்றைச் செய்யக் கூடாது:-
  • ஏவல்
  • கம்பு. சிறந்த சத்துக்கள்
  • கனவுகளுக்கும் பலன்
  • காஃபி
  • குழந்தைகள்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • கொடுத்த கடன் தொகைகள்
  • சகுனம்
  • செய்வினையை நீக்கியது
  • தேனில்
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி
  • பைரவரை வழிபட்டால்
  • பொது நலன்
  • மருத்துவத் தாவரங்கள்
  • மூலிகை தைலம்
  • மூலிகை பொடிகளின்
  • வரலாறு
  • வளமுடன்
  • வாழ்க
  • வாழ்க வளமுடன்
  • வாஸ்து வாழ்கவளமுடன்
  • வினை தீர்க்கும் நாயகனே
  • வெற்றி
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள்

Followers

Followers

Mind relaxing

Blog Archive

  • ►  2023 (2)
    • ►  July (2)
  • ►  2021 (1)
    • ►  April (1)
  • ►  2019 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2017 (87)
    • ►  December (12)
    • ►  November (4)
    • ►  August (3)
    • ►  July (40)
    • ▼  June (18)
      • கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) இதனை நாய் துளசி எ...
      • மூலிகை குளிக்கும் தூள் மூலிகை குளிக்கும் தூளிலு...
      • சகுனம் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம...
      • சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம் ந...
      • முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்ட...
      • மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ”---------...
      • 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02....
      • வாஸ்து வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழ...
      • உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற...
      • சப்தமி சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்...
      •  கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!! நன...
      • சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் ...
      •  2500 ஆண்டுகளுக்கு முன்பே யூகிமுனிவர் கருத்தரித்...
      • கோவிலில் செய்ய கூடாதவை.... 1.கோவிலில் தூங்க க...
      • லால் கிதாப் பரிகாரங்கள் வடஇந்தியாவ...
      • ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி
      • ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகள...
      • முருகன் குறித்த பழமொழிகள் <!--more--> வேலை வணங்கு...
    • ►  May (9)
    • ►  February (1)
  • ►  2016 (52)
    • ►  October (24)
    • ►  September (28)

Report Abuse

Wikipedia

Search results

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Translate

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா
  • எவற்றைச் செய்யக் கூடாது:-
  • ஏவல்
  • கம்பு. சிறந்த சத்துக்கள்
  • கனவுகளுக்கும் பலன்
  • காஃபி
  • குழந்தைகள்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • கொடுத்த கடன் தொகைகள்
  • சகுனம்
  • செய்வினையை நீக்கியது
  • தேனில்
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி
  • பைரவரை வழிபட்டால்
  • பொது நலன்
  • மருத்துவத் தாவரங்கள்
  • மூலிகை தைலம்
  • மூலிகை பொடிகளின்
  • வரலாறு
  • வளமுடன்
  • வாழ்க
  • வாழ்க வளமுடன்
  • வாஸ்து வாழ்கவளமுடன்
  • வினை தீர்க்கும் நாயகனே
  • வெற்றி
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள்
Simple theme. Powered by Blogger.