Thursday, October 20, 2016

ஆண்டாள் தன் பாசுரத்தில் “கோட்டுக்கால் கட்டிலின் மீதே” எனப் பாடி பள்ளியறை அமைப்பை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறாள்.“கோடு” என்றால் யானை தந்தம். 

‘‘யானை தந்தத்தால் செய்த கட்டிலின் மீது உறங்குகிறாய், நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம் துயிலெழுந்து வா,’’ என தோழிகள் அழைப்பதாய் இப்பாசுரம் உள்ளது.ஆம். கட்டில் எதனால் செய்திருக்க வேண்டும் என்று திருப்பாவை நமக்கு தெளிவாக்குகிறது.கட்டிலை இப்போதெல்லாம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை கொண்டு செய்கிறோம். இவையெல்லாம் கட்டிலுக்கான சரியான பொருட்கள் அல்ல.

கட்டிலுக்கு ஏற்றதாக சந்தனமரம், தேக்கு, பூவரசு, மருது, கருங்காலி, மூங்கில், கோரை, தர்ப்பை (திருப்புல்லாணியில் ராமர் தர்ப்பசயனத்தில் வீற்றிருக்கிறார்) போன்றவற்றால் மட்டுமே செய்தால் நல்லதென வாஸ்து கூறுகிறது. அதுவும் தலைப்பகுதி சற்றே உயரம் வைத்தும், அப்பகுதிப் பலகை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, சதுரமாகவோ வேலைப்பாடுகளுடன் இருப்பது நல்லது என்கிறது வாஸ்து விஞ்ஞானம்.

ஏன் இந்த மரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்? மற்ற பொருட்களைப் படுக்கையாக்கி உபயோகிக்கும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நோய்வாய்ப் படுதல், தீவிரவாத குணமுடைய குழந்தைகள் உருவாவது, சண்டை சச்சரவுகள் அடிக்கடி வருவது போன்றவை நிகழும்.வெள்ளி, தங்கம் உலோகம் கொண்டும் கட்டில்களை செய்யலாம், அலங்கரிக் கலாம். செம்பு, பித்தளை உலோகங்கள் வடிவமைப்பு செய்ய ஏற்றவை. 

மைசூர் மகாராஜா, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர், தஞ்சை சரபோஜி மன்னர், நாயக்கர் மஹால் அரசர், கிருஷ்ண தேவராயர், பீஜப்பூர் சுல்தான், ஔரங்கசீப், நாட்டுக் கோட்டை நகரத்தார், ராமநாத புரம் பாஸ்கர சேதுபதி ஆகியோர் இப்பொருட் களை கொண்டு கட்டில்கள் செய்து சக போக வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். இதை வரலாறு மூலமும் தெரிந்து கொள்ளமுடியும்; இன்றைக்கும் மியூசியம் எனப்படும் அருங்காட்சியகத்தில் அவற்றை தரிசிக்க முடியும்.

ஊஞ்சல் போல கட்டில் செய்து படுப்பதும் இந்நாளிலும் பல வீடுகளிலும் உண்டு.திவான் எனப்படும் பகல் நேர ஓய்வு படுக்கையும் வடமாநில மக்கள் பலரும் உபயோகிக்கிறார்கள்.இவை எல்லாம் மன்னர்கள், உயர் குடி மக்களுக்குதானே என நினைக்கலாம். நாமும் பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு மரக்கட்டிலை உபயோகப்படுத்தலாமே! இதனால் நல்ல தூக்கம் தூங்கி புத்துணர்ச்சியுடன் விழிப்பது நன்மைகளை தோன்றுவிக்கும். அமைதி ததும்பும் அறையாக மாற்ற முடியும்.சரி மெத்தையாக எவற்றை உபயோகிக்கலாம்?

முதல் தேர்வாக “இலவம் பஞ்சு” என்கிறது வாஸ்து விஞ்ஞானம். அதற்கடுத்து “வாழை நார்”, சிறிது தேங்காய் நார் (அடிப்பகுதி) உபயோகப்படுத்தலாம் என மென்மையான பருத்தியை உபயோகப்படுத்துவது நலம் என்றுரைக்கிறது.மாம்பலகை கட்டில் குளிர்ச்சியையும், அமைதியையும், பலாமரப் பலகை ஆழ்ந்த நித்திரை அளிக்க வல்லதாகவும், வேப்பம் பலகை சூடு தணித்து மூல நோய், வெட்கை, அல்சர் எனப்படும் வயிற்று புண்களைக் குணப்படுத்தும் திறன் மிக்கதாகவும் உள்ளன.

எரிந்து போன மரம், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட மரம், ஏலத்தில் எடுத்த மரம், புயலால் சாய்ந்த மரம் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாகாது. இதனால் வெறுப்பு, சஞ்சலம், கொலை வெறி, ஒற்றுமையின்மை ஆகிய கெடுபலன்கள் உபயோகிப்பவர்களை வந்து சேரும்.“ச்சீ’’ சக்தி இல்லாத பொருளாக இவை இருப்பதால் இவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க சொல்கிறது பெங்சூயி. படுக்கை அறையிலிருந்து வெளியே பார்த்தால் நீர்நிலை எதுவும் தெரியக்கூடாது என்கிறது பெங்சூயி.

ரிசார்ட் எனப்படும் பொழுதுபோக்கு இடங்களில் “ரிவர் வியூ” (ஸிவீஸ்மீக்ஷீ க்ஷிவீமீஷ்), பால்ஸ் வியூ (Falls View), டேம் வியூ, நீர்த்தேக்க பார்வை, கடல் காட்சி (ஷிமீணீ க்ஷிவீமீஷ்) என ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் பாதிப்பை அடைவார்கள். சில நாள்கள் தங்குவதில் தவறில்லை. குடும்பம் நடத்த ஏதுவானவையாக மேற்காணும் நீர்நிலை ஒட்டிய பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்டாயம் எனில் ஒரு பால்கனியை அமைத்து பூஞ்செடிகள், சிம், கண்ணாடி அமைத்து பரிகாரம் செய்யச் சொல்கிறது பெங்சூயி. பால்கனிக்கு கதவு அவசியம் இருக்க வலியுறுத்துகிறது.

படுக்கையை மூலையில் அமைக்கக் கூடாது. கட்டிலின் 3 புறமும் நடக்கும் வகையிலும் தெற்கு புறம் குறைந்த காலியிடம் விட்டும் படுக்கையை அமைக்க வேண்டும்.மணமான தம்பதியர் அறையில் “பாகுவா” படி சிவப்பு அல்லது வெள்ளை நிற அலங்காரப் பொருட்கள் வைக்க அன்யோன்யம் பெருகும்.

கதவை நோக்கி கால்கள் இருக்கக் கூடாது. இதனால் நல்சக்தி கால்வழியாக வெளியேறி கதவு வழியே சென்று விடுவதால் சோம்பல் தன்மை மிகும்.பரிகாரமாக “கிரிஸ்டல்’’ எனப்படும் பல முகங்கள் கொண்ட கண்ணாடியை தொங்க விடலாம் அல்லது ஓசை எழுப்பும் மணியை தொங்க விட்டு அவ்வப்போது எழும் ஓசையால் குறைபாடு நீங்கப் பெறலாம்.

படுக்கையை ஒட்டி ஜன்னல் கூடாது. இயல்பாக பொறியாளர்கள் அறையின் மையத்தில் ஜன்னல் களை வைத்து “கிராஸ் வெண்டிலேஷன்”  - குறுக்குவாட்டு காற்று வீச்சு - என குறிப்பிடுகின்றனர். இவை நல்லதல்ல. அறையின் வடக்கு/ கிழக்கு மூலையில் 9 அங்குலங்கள் தள்ளி ஜன்னல்களை அமைக்கவும். கதவிற்கு எதிர் சுவரின் அருகில் படுப்பது ராஜ 
சம்பத்தை அளிக்கும் என்பார்கள். 

கதவுகள் திறக்கும் போது சப்தங்கள் வந்தால் (கோடை காலத்தில் நிகழும்) “ச்சீ’’யின் ஓட்டத்தை வெகுவாக பாதித்து, மன உளைச்சலை தருபவையாக மாறி விடுகின்றன. படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு / கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நன் மக்களாகவும் இருப்பார்கள். 

அதிகபட்ட வெளிச்சம் “ஷா” வை குறிக்கும் என்பதால் 3  X  3, 4  X  4 சதுர அடிகள் கொண்ட ஜன்னல்கள் (இது 11   X  11, 11   X  16, 16  X  16 அடிகள் கொண்ட படுக்கை அறைக்கு) அமைப்பது சிறந்தது. மற்ற அறைகளில் திரைச்சீலை இல்லை எனினும் கண்டிப்பாக கனமான ஸ்கீரின் படுக்கை அறையில் அமைப்பது சிறந்தது. கண்ணாடிகளையும் கருநீலம், சாம்பல் கலரில் அமைப்பதும் நன்மை தரும். 

ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க கூடாது. “யின்” எனும் எதிர்மறை சக்தி அறைக்குள்ளேயே தங்கிவிடும். இதனால் செல்வ இழப்பும், நோய்களும் எளிதில் வரக்கூடும். அவ்வப்போது திறந்து மூடும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்.

தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும்.படுக்கை அறையின் ஜன்னல் திறந்தால் உயர்ந்த மரம், கம்பம், மின்மாற்றி (டிரான்ஸ்ஃபார்மர்) தெரியக்கூடாது. இதனால் வழக்கு, வியாஜ்ஜியம், விவாதங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.படுக்கை அறையின் உட்புற வாஸ்து, பெங்சூயி அம்சங்கள்:

புதுமணத்தம்பதிகளின் “சாந்தி முகூர்த்த” நிகழ்விற்கு எத்துணை முக்கியத்துவம் கொடுத்து படுக்கையறையை அலங்கரிப்போமோ, அதனை பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி நிலவும். காலையில் கண் விழித்த உடன் இந்த அலங்காரப் பொருட்களே கண்ணில் படும் என்பதால் இவை மனதிற்கு இதம் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டுபவையாக இருக்க வேண்டும்.

விவாகரத்தான பெரும்பாலான தம்பதிகள் அறை பெரும்பாலும் விரக்தி தரும் அமைப்புகளான சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்கள் என்றும் இப்படி பல ஏற்றுக்கொள்ள இயலாத பொருட்கள் இடம் பெற்றிருப்பதே காரணமாகும். மிகவும் ஒளிரும், பிரகாசமான பொருட்கள் நல்லதல்ல. பொருளற்ற ஓவியம், படங்கள், மிருகங்கள் மோதிக்கொள்ளும் திரைச்சீலைகள், அமைதியை கெடுத்து வெறியை தூண்டுகின்றன.

காதலை / அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது சாலச்சிறந்தது. தோல் போன்றவற்றை சுவரில் அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும். காமத்தை தூண்டும் படங்களையும் தவிர்க்க வேண்டும்.ஜோடியான ஓநாய்கள், பீனிக்ஸ் பறவைகள், டிராகன், மீன்கள், இரட்டை வாத்துக்கள், ஹம்மிங் பறவைகள் ஒற்றுமை, வலிமையை குறிக்கின்றன.பழக்கூடைகளை படுக்கையறையில் வைப்பது சிறந்ததே. பூக்கூடை நல்லதல்ல. காரணம் இவை வாடி வதங்கி தீயச்சக்திக்கு வழிவகுக்கும்.மாதுளை, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் போன்றவற்றை படுக்கை அறையில் வைக்க சிறப்பான குழந்தைபேற்றை தருவிக்கும்.

படங்களை குளியலறை கதவிற்கு அருகிலோ, குப்பைக் கூடைக்கு அருகிலோ வைக்கக்கூடாது. குழந்தைகள் படம், சந்தான கோபாலன் படம் ஆகியவை குடும்ப உறவை வலுப்படுத்தும் அலங்காரங்களாகும். படத்தை தூசி இன்றி துடைத்து வைப்பது அவசியம்.

கெட்ட கனவு, பேய் பிசாசு துரத்துவது, அடிபடுவது போன்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை பாழ்படுத்தி விடும். இதை தவிர்க்க பெங்சூயி கூறும் உபாயமாக, சிறிய பீங்கான் கிண்ணத்தில் கடல் உப்பை வைத்திருந்தால் கெட்ட கனவுகள் வெகுவாக குறையும். தலைக்கு அருகில் கண்ணாடி சிலைகளையோ, அல்லி, தாமரைகளை (புதிது புதிதாக) வைத்து வந்தால் பொறுப்புகள் எளிதாக நிறைவேறும்.

Monday, October 17, 2016

காஃபி (Coffee) இதை நாம் அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இந்தக் காஃபி எங்கிருந்து தோன்றியது தெரியுமா? எதியோப்பியாவில்தான் முதன் முதலில் காஃபிச் செடிகள் தோன்றின.  
   ஆனால் ஒரு செவி வழி கதை பரவலாக உண்டு கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த   சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் ஏன் அப்படி நடந்து கொள்கிறது அவர்களுக்கு தெரியவில்லை மறு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலை, காய்களை சாப்பிட்டு சுறு சுறுப்பாக இருந்தது அதுதான் காப்பிச் செடி. ஆடுகள் காஃபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
     700 ஆண்டுகளுக்கு முன்னர், எதியோப்பியாவிலிருந்து ஏமன் நாட்டுக்கும் பிற அரபு நாடுகளுக்கும் காப்பிச் செடி கொண்டுபோகப்பட்டது. அரபு வியாபாரிகள்தான் காஃபி விதைகளை (400 ஆண்டுகளுக்கு முன்னர்) ஆசியா கண்டத்துக்கும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு சென்றனர். 1727-ம் ஆண்டு பிரேசில் நாட்டில்தான் முதல் காஃபி எஸ்டேட் நிறுவப்பட்டது.
   இந்தியாவுக்கு காஃபி வந்தது ஒரு சுவையான வரலாறு: 1720-ம் ஆண்டு பாபா புதான் என்பவர் மெக்காவுக்குச் சென்று வரும்போது 7 காஃபி விதைகளைக் கொண்டு வந்தார். கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் கிராமத்தில் தனது நிலத்தில் இந்த விதைகளை விதைத்தார். இந்தியக் காஃபிச் செடிகள் அனைத்தும் இந்த 7 விதைகளிலிருந்துதான் தோன்றின. பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் நீலகிரி மலைப் பகுதியில் காஃபி எஸ்டேட்டுகள் ஏராளமாக நிறுவப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது.
         காஃபி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). ஆரம்பக் காலத்தில் பானமாக இல்லாமல் வெறுமனே காப்பி இலைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
காஃபி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காஃபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காஃபி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காஃபியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காஃபி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 மில்லி லிட்டர்) காஃபி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும்   இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காஃபி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்
கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா?
அப்துல் கலாம் சொன்னதைப் போன்று கனவு கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதியளிக்கிறேன். ஆனால், தூங்கும்போது காணும் கனவுகள் அப்படியே நடக்கும் என்று என்னால் உறுதியளிக்க இயலாது.
யாருக்கு நடக்கும், எப்படி நடக்கும், எப்போது நடக்கும்?
நாம் கண்ட கனவு நமக்கே நடக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமது உறவினர்களுக்கோ அயலாருக்கோ நடக்கலாம். அவ்வளவு ஏன், நாம் இதுவரைப் பார்த்திராத ஒருவருக்குக் கூட நடக்கலாம். ஆனால், அவருக்கு அவ்வாறு நடக்கும்போது அவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பார். மேலும் நாம் அந்த நிகழ்வைப் பார்த்து நம் கனவின் அர்த்தத்தை உணர்ந்துகொள்வோம்.
நாம் காணும் கனவு அப்படியேயும் நடக்கலாம் அல்லது அதைப் போன்று வேறொன்றும் நடக்கலாம்.
நாம் காணும் கனவு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் எப்போது நடந்தாலும் கனவின் பொருள் உணர்ந்தவர்களுக்கு அந்த கனவுதான் பலித்துள்ளது என்பது விளங்கும்.
வாழ்கையில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவாக வருகின்றனவா அல்லது நாம் கண்ட கனவினால் வாழ்கையில் சம்பவங்கள் நிகழ்கின்றனவா?
இரண்டுமே காரணமாக அமைகிறது.
நல்ல கனவுகள்
குப்பைப் பொறுக்குவது போன்ற கனவு – தவறான அல்லது வேண்டத்தகாதவைகளை நாம் அகற்றிவிட்டோம் என்று அர்த்தம்.
பல் முளைத்தல் – நமக்கு சமுதாயத்தில் மரியாதை கூடும். நமது சொல்லிற்கு அனைவரும் மதிப்புக் கொடுப்பார்கள்.
பழம் வாங்குதல் – நன்மை வந்து சேரும்.
தண்ணீரில் அடித்துச் சென்று கரையேறிவிட்டால் – பெரிய துன்பம் வந்தாலும் அதிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்பது பொருள்.
பாம்பை நசுக்குவது அல்லது கொல்வது போன்ற கனவு – ஏதோ ஒரு தீமையை வென்றுவிட்டோம் என்று அர்த்தம்.
கெட்ட கனவுகள்
நாம் நடந்து செல்லும்போது மரம் எதிரில் விழுதல் – யாரோ நமக்கு எதிராக சதித்திட்டம் செய்து நமது வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அந்தரத்தில் தொங்குவது போன்ற கனவு – பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறோம் என்று அர்த்தம். உடனடித் தீர்வு காணவேண்டும்.
முடி கொட்டுவது போன்ற கனவு – நிறைய இழப்புக்கு (உயிர் இழப்பைத் தவிர்த்து) உள்ளாக நேரிடும்.
விறகு நாம் எடுத்தால் அல்லது யாரேனும் நம்மிடம் கொடுத்தால் கலகத்திற்கு அடையாளம். கண்டிப்பாக சண்டை வருவது உறுதி.
நமது இருக்கையில் யாராவது அமர்ந்தால் அவர்கள் நம்மை ஆதிக்கம் செய்யப் போகிறார்கள் என்று அர்த்தம்.
வீட்டினுள் பாம்பு நுழைதல் – குடும்பத்திற்கு நிறைய ஆபத்துக்கள் உள்ளன. கவனமாக வாழ வேண்டும்.
தலையில் இருந்து பூ எடுத்துப் போடுவது போன்ற கனவு – கனவு கண்டவரின் கணவரோ அல்லது நெருங்கிய உறவினர்களின் கணவரோ இறக்க நேரிடும்.
நமக்குப் பிடிக்காதவர்கள் நமக்குப் பிடித்தவர்களின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நமக்குப் பிடித்தவரும் நமக்கு எதிரியாக மாறப்போகிறார்கள் என்று அர்த்தம்.
ஜோதிடர்கள் கனவில் வந்தால் - தீய சக்திகளின் ஆதிக்கம் நம்மீது உள்ளது.
கறி தின்றால் – யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போய்விடும் அல்லது இறப்பு தகவல் வரும்.
வேர்க்கடலைத் தின்றால் – நோய்க்கு அறிகுறி.
பல் கொட்டுவது போன்ற கனவு – பல அவமானங்களை சந்திக்க நேரிடும்.
துறவிகள் கனவில் வந்தாலும் அது தீய சக்தியே.
கனவில் படுத்துக் கொண்டிருத்தல் – உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் அல்லது நமது பிழைப்பு அடிமட்டத்திற்கு செல்லப்போகிறது என்று அர்த்தம்.
துணி அவிழ்ந்து விழுதல் – அடுத்தவர் முன்னிலையில் அவமானங்களை எதிர்கொள்ளப்போகிறோம்.
காட்டுப் பழங்கள் பறித்தல் அல்லது வாங்குதல் – வீட்டிற்கு பீடையை கொண்டுவந்து சேர்த்துவிட்டோம் என்பது பொருள். பலவகை துன்பங்கள் நெருக்கங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும். மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் வாங்குவது நல்லது. ஆனால், காட்டில் விளையும் பழங்கலான நாவல், cherry வகைகள் வாங்குவதோ அல்லது பறித்துச் சாப்பிடுவதோ கெடுதல்.
செடியிலிருந்து பழம் பறித்தல் – பழத்தை யாராவது கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் நாமே செடியிலிருந்து பறிப்பது வாழ்கையில் துன்பங்களுக்கான அறிகுறி.
நம் துணி தண்ணீரில் அடித்துச் செல்வதுபோன்ற கனவு – நமது செல்வத்தில் கொஞ்சம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.
செருப்பைத் தொலைத்தல் – நமது பாதுகாப்பைத் தொலைத்துவிட்டோம், துன்பங்கள் நம்மைத் தொடர்வதற்கு வழிவகுத்துவிட்டோம் என்பது பொருள்.
கனவில் குளித்தல் – அவ்வளவும் நமக்கு நோய்.
தண்ணீரில் மூழ்குவது போன்ற கனவு – இறப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.
கனவில் மீன் பிடித்தல், காளான் பிடுங்குதல் – குடும்பத்தில் யாரோ ஒருவர் படுக்கையில் விழப்போகிறார் என்று அர்த்தம்.
சில உண்மைக் கனவுகள் மற்றும் தொடர்புடைய சம்பவங்கள்
சென்ற வெள்ளிக்கிழமை இரவு நான் மீன் பிடிப்பதைப் போன்று கனவு கண்டேன். அதை சனிக்கிழமை என் அம்மாவிடம் கூறியபோது நோய்க்கு அறிகுறி என்று பயந்தார். மேலும் அவரும் தான் கண்ட கனவை சொல்லி புலம்பினார். அவர் கண்ட கனவில் ஒரு குறுமரத்தில் இலைகளுக்குப் பதிலாக வேர்க்கடலை காய்த்துத் தொங்கியதாகவும், வேர்க்கடலை என்பதும் நோய்க்கு அறிகுறி என்றும் பயந்தார். என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லிவிட்டு CRC meeting சென்றுவிட்டார். அவர் பயந்ததுபோலவே அன்று மதியமே எனக்கு மோசமான காய்ச்சல். நேற்றுதான் எனது உடல்நிலை சரியானது. இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். என் அம்மா கண்ட கனவில் வந்தது சிறிய மரம். அதனால்தான் எனக்கு பிரச்சினை. அதுவே பெரிய மரமாக இருந்திருந்தால் என் பெற்றோர்களுக்கு நோய் வந்திருக்கலாம்.
ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் அம்மா கண்ட கனவில் யாரோ ஒருவர் வந்து “நான் கொடுத்த ஜவுரி முடியைத் திருப்பிக் கொடு” என்று கட்டாயப்படுத்திக் கேட்டு வாங்கிச் சென்றாராம். அதனால் அன்றே என் அம்மாவிற்கு பணியிறக்கம் கிடைத்தது. AEOவாக இருந்த ஒருவர் நடுநிலைப் பள்ளி தலமையாசிரியராக பணியிறக்கம் வாங்கிக்கொண்டதால் seniority அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருந்த என் அம்மா ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியையாக சென்றார். பின் ஆறுமாதம் கழித்து நிறைய முடி அடர்த்தியாக வளர்ந்திருப்பதைப் போன்று கனவு கண்டார். அதன்படியே அவருக்கு மீண்டும் பதவியுயர்வு கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு என் அண்டை வீட்டுப் பாட்டி ஒருவர் வாழை மரம் சாய்ந்து விழுவதுபோல் கனவு கண்டார். காலையில் எழுந்து பார்த்தபோது உண்மையாகவே அவர் வீட்டு வாழைமரம் குலையுடன் சாய்ந்திருந்தது. அவர் வாழைக் குலை சாய்ந்தால் பெரியவர்கள் யாராவது இறப்பார்களே, என்ன நடக்குமோ என்று புலம்பிக்கொண்டிருந்தார். அவர் பயந்ததுபோலவே அன்று இரவு இறப்புச் செய்தி வந்தது. அவரது பேரன்களில் ஒருவர் (ஐம்பது வயது) இறந்துவிட்டார்.
அடுத்த கனவு என் பெரியம்மாவுக்கு வந்தது. அதில் ஒருவர் “நீ வைத்திருக்கும் காசில் இரண்டைக் கொடு” என்று கேட்டாராம். அவரும் கொடுத்துவிட்டாராம். பொதுவாக கனவில் பணத்தை வாங்கினால் கெட்டது, கொடுத்தால் நம்மிடமுள்ள பீடையை ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று அர்த்தம். ஆனால், இந்த கனவு கொஞ்சம் வித்தியாசமானது. என் பெரியம்மா வைத்திருந்ததில் இரண்டைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் அவர். அதன்பிறகு ஒரு கொடுமை அரங்கேறியது. அவரின் ஐந்து பிள்ளைகளில் இருவர் கிணற்றில் குளிக்கச் செல்லும்போது இறந்துவிட்டனர்.
மேலும் ஒரு கனவு. உறவினரின் மகள் ஒருவர் துறவறம் செல்ல படித்துக் கொண்டிருந்தார் (கிறிஸ்துவ முறைப்படி துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த இறைக்கல்வி பயிலவேண்டும். இந்த இறைக்கல்வி கற்பிக்கப்படும் இடம் மடம் என்று அழைக்கப்படுகிறது. கல்விக்காலம் பொதுவாக பெண்களுக்கு ஐந்து வருடங்கள், ஆண்களுக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு மேல். இந்த காலக்கட்டத்தில் அவர்கள் துறவற வாழ்கையின் கஷ்டத்தை உணர்வார்கள். எனவே சிலர் துறவறம் வேண்டாம் என்று வந்துவிடுவர். சிலரை மடத்து நிர்வாகிகளே அனுப்பிவைத்துவிடுவார்கள்). அவரது தாய்வீட்டில் இருந்து வெகுதொலைவில் உள்ள அத்தை வீட்டார் கனவில் அந்த பெண் பச்சைப் புடவை அணிந்து வந்திருக்கிறார். எனவே, அவர்கள் அந்த பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து “உங்கள் மகள் துறவறம் செல்வதை கடவுள் விரும்பவில்லை போலும். அவள் கன்னியர் மடத்தைவிட்டு திரும்பி வந்துவிடுவாள்.” என்று கூறி தங்கள் கனவைச் சொல்லி விளக்கினர். அதேபோல் ஒருவாரத்தில் அந்த பெண் தேவ அழைத்தல் இல்லை என அனுப்பப்பட்டார்.
கனவுகளைக் கண்டு அஞ்சவேண்டாம்
பல மோசமானக் கனவுகளைக் கண்டவர்கள்கூட அதற்கான பலனை அனுபவிக்காமல் தப்பித்திருக்கிறார்கள். எனவே, எந்தவித மோசமான கனவாக இருந்தாலும் நமது ஒரே அடைக்கலம் கடவுளாக இருப்பின் தப்பிக்க வழியுண்டு. சில கடவுள் அனுக்கிரகம் உள்ளவர்கள் கனவிலேயே எச்சரிக்கப்பட்டு கனவையே மாற்றிக் காண்கின்றனர். உதாரணமாக கனவில் ஒருவர் நம்மிடம் உள்ள ஒரு பொருளை கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமும் கொடுக்க முயல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவ்வாறு கொடுத்தால் நம்மிடமுள்ள ஏதோ ஒரு செல்வம் பறிபோகிறது என்று அர்த்தம். ஆனால், கடவுள் அனுக்கிரகம் இருந்தால் நாம் கனவிலேயே நினைவு திரும்பி அவ்வாறு கொடுத்தல் தவறு என உணர்ந்து அந்த பொருளை அவரிடம் கொடுக்கமாட்டோம். கடவுள் திருவடிகளே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு.

Sunday, October 16, 2016

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன.ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

Thursday, October 13, 2016

எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்:-
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அதுபோன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள் மனஅழுத்தம், திடீர் உடல்நலக்கோளாறு, திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற துன்பங்கள் நம்மை துரத்தும் போது கீழ்கண்ட பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்...
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். இதை தினமும் செய்யலாம்...
இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் :
ஒரு பெரிய வாளி
தண்ணீர்
ஹிமாலயன் ராக் சால்ட் (himalayan rock salt) 1 பாக்கெட்
செய்முறை :
வாளியில் 1 பாக்கெட் ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கொட்ட வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை வாளியின் உள்ளே விட்டு முட்டிக்கு சற்று கீழே வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். கால்களை தண்ணீரில் வைத்தபடி சிறிது நேரம் கண்களை மூடி அமர வேண்டும். பின்னர் மனதில் ‘என் உடம்பில் மனதில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென’ பிரார்த்திக்கொண்டே இரண்டு கால்களை நன்றாக கால் பாதங்களால் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு மனதில் நினைத்தபடி 15 நிமிடம் கால்களை தேய்க்க வேண்டும். 15 நிமிடம் செய்த பின்னர் தண்ணீரை பார்த்தால் சிலருக்கு தண்ணீர் மிகவும் கருப்பாக மாறியிருக்கும்.
சிலருக்கு தண்ணீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இதை செய்து முடித்ததும் மிகவும் களைப்பாக உணருவார்கள். இது உங்களை சுற்றி இருந்த எதிர்மறை சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பதை குறிக்கும். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல செயல்கள் நடக்க ஆரம்பிக்கும். ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பை பயன்படுத்தலாம். ஹிமாலயன் ராக் சால்ட்டை பயன்படுத்தும் போது 100%மும், மற்ற உப்பு பயன்படுத்தும் போது 60%மும் பலன் கிடைக்கும்
ஆன்மீகம் 
பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம் பிடிக்கும் பலி பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.
அசைவ உணவு சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனக் கூறுவது ஏன்:-
பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.
மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை.
எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது
சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்:-
நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..
ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத்தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.
அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.
எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.
தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.
வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப்பெற்று மகிழ்வுடன்வாழலாம்.
எவற்றைச் செய்யக் கூடாது:-
1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது
5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது
.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது!


செல்வம் பெருக சில குறிப்புகள்:-
1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித
ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை
காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு
அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது
குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்
பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்
கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்
.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,
பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்
வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக
பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்
அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்
விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி
ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்
இல்லாதவர்
கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்
லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி
நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து
உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை
மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை
அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம்
ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி
தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம்
சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட
லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க
ஐஸ்வர்யம் பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்
கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில்
முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம்
ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண
லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி
வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து
மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து
மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை
தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்
கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்
ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி
கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்
நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து
வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து
வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட
ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை
வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு
33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்
செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி
இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்..
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.
விளக்கு ஏற்றும் விதம்
(7)தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
(8)வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
(9)புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
(10)சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
(11)பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
(12)கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
(13)மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்
(14)பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(15)குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(16)நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
(17)நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
(18)விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
(19)வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
(20)ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;

1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.குளிக்காமல் கோவில் போககூடாது ...
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.படிகளில் உட்கார கூடாது .
12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
கோவில் நூலில் இருந்து ......
பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.
ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் ``பைரவர் வழிபாடு கைமேல் பலன்'' என்ற பழமொழி ஏற்பட்டது.
``பைரவா....'' என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.
எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும்.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.
இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.
செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்!!
கனவுகளும் அதன் பலன்களும்
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும்.
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்
நற்பலன் தரும் கனவுகள்
v ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
v வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
v கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
v விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
v திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
v ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.v இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
v சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
v நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
v தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
v இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
v திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
v தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
v உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
v கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
v ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
v மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
v கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
v மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
v வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
v மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
v பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
v தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
v எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
v எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
v இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
v பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
v புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
v குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
v நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
v ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
v நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
v முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
v முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
v சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
v பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
v காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது
நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம்சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப்பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம்சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள், காகம், மீன், இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-செல்வம்சேரும்
10,)இளம் பெண், மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து, வாசனைப்பொருட்களை படுக்கையில் அணிந்து, அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச் செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக்கண்டால் அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப்பாம்பு கையில் கடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக் கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம்சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால் கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம், பழவகைகள், ஆறு, கடல், தயிர், பால், நெய், மாங்கனி, சீனிவெல்லம், பாயசம், தண்ணீர்க்குடம், சாமரம், இரத்தம். சமைத்த மாமிசம், இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம், குரு, சாது, இஷ்ட தெய்வம், நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும், பாம்பு, கடிப்பதாகவும் பூச்சி கடிப்பதாகவும், பெண்களுடன் பேசுவதாகவும் கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம், சாதம், வெற்றிலை, பாக்கு, தானியம், இவைகளைப் பெறுவதாகவும், சாதத்தை உண்பதாகவும், தான் பால் அபிஷேகம், செய்யப்படு வதாகவும் கனவு கண்டால்- விரைவில் லாபம் பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக்தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்...
தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்
ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.
அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும்.
தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள்.
பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்
வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்
இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.
இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது.
இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்.
கனவில் அந்தனனைக் கண்டால் நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தலப் பயணம் மேற்கொள்ள நேரும். புண்ணிய ஆலய வழிபாடு, புனித நீராடல் நிகழும்.
கனவில் அரசனைக் கண்டாலும், அரசரோடு தொடர்பு கொண்டாலும் நல்ல செல்வாக்காகும். மதிப்பும், உயர்வும் உண்டாகும். அரசர் போன்ற பெரும் பதவியில் உள்ளோரைக் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.
அமைச்சரோடு தொடர்பு கொள்வது போன்றோ அல்லது உரையாடுவது போன்றோ கனவு கண்டால், விரைவில் பதிவை உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கனவில் அயல் நாட்டவர் தோன்றினால் அயல் நாட்டு வானிகத் தொடர்பு உண்டாகும். அயல் நாட்டிலிருந்து பொருள் வரவு உண்டு!
அயல் நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால், புதியவர் ஒருவரின் தொடர்பு உண்டாகும். தாம் அயல் நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டது போல் கனவு கண்டால் புதிய தொழிலில் அல்லது புதிய வணிகத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
அதிசயமான - விந்தையான மனிதரைக் கனவில் கண்டால் தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை மோசடி உண்டாக வாய்ப்புண்டாகும்.
அறிஞரைக் காண்பது போலவோ, அல்லது அறிஞரோடு உரையாடுவது போலவோ கனவு கண்டால் அறிவுப் பெருக்கம் உண்டாகும்.
காடுகளிலும் மலைகளிலும் வாழக்கூடிய மலைவாசிகள் அல்லது ஆதிவாசிகள் கனவில் தோன்றினால், புதிய புதிய வருமானம் உண்டாகும். பழைய கடன் அடைபடும். நாடோடிகளையும், நரிக்குறவர்களையும் கனவில் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.
பிறர் ஒரு பொருளை ஏலம் விடுவது போலக் கனவு கண்டால், அவ்வாறு கனவு காண்பவர் வேலையில்லாதவராக இருந்தால் உடனே வேலை கிடைக்கும். அவ்வாறு கனவு கண்டவர் வேலையில் உள்ளவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும்.
ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம்.
செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும்.
எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும்.
கனவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும்.
ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும்.
மலையை கனவில் கண்டால் என்ன பலன்
மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும்.
மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.
மலையை உடைப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும். நிலையான அந்தஸ்துக்கு வருவீர்கள். உங்கள் செயலில் மந்த நிலை விலகி சுறுசுறுப்பு உண்டாகும்.
புகை கனவில் வந்தால் என்ன பலன்
வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். புதிய நட்பால் மேன்மையும் பழைய நட்பால் சங்கடங்களும் மாறி மாறி ஏற்படும்.
சிகரேட் பிடிப்பது போல கனவு கண்டால், மனதில் நீண்ட காலமாக இருந்த கவலை விலகும். பிரியமானவ்ர்களின் மனசங்கடத்திற்கு ஆளவீர்கள். சுறுசுறுப்பு குறையும்.
நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன்
நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.
நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
குடும்பத்தில் இறந்துபோன மூத்தோர்கள் கனவில் வந்தால், வீட்டில் திருமணம் போன்ற காரியம் கைகூடும். வீடு தீப்பிடித்து எரிந்தால் அந்தத் தெருவில் அல்லது வீட்டில் அல்லது உறவுகளில் யாரேனும் பெண்ணொருத்தி பூப்பெய்தப் போகிறாள்.
விதவைப் பாட்டிகள் வந்தால்- மகமாயி, பச்சிளம் பெண் குழந்தைகள் வந்தால்-கன்னிமார்கள். அன்னதானப் பந்தியில் சாப்பிடுவது மாதிரி வந்தால்- முருகன் அமுது (அன்னதானம்)போடச் சொல்கிறார், மாலை அலங் காரத்துடன் கும்பம் வந்தால் கல்யாணம், பனங்காய் மாதிரி புடைத்த தோள்களுடன் கருத்தமுறுக்கு மீசை, சூலமேந்தி வந்தால் நமக்கு கெடுதல் நினைத்தவர்களைப் தெய்வம் பழி வாங்குதல் அல்லது எதிரிக்கு மரணம் நேரும்..